இன்றெல்லாம் ஏராளமான காதல் குறிப்புகள், கவிதைகள், நினைவுச் சிதறல்கள் என்று சமூக வெளி எங்கும் ஊதுபத்திப் புகை போலக் காதல் மிதந்து ஊர்ந்துகொண்டே இருந்தது. தனக்கு வரும் மர்மப் பரிசுகளை மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து புகைப்படங்களாகவும் குறிப்புகளாகவும் தெரியப்படுத்திக்கொண்டே இருந்தார். தனக்கு யாரும் முத்தம் தரப்போவதில்லை என்று நிச்சயமாகத் தெரிந்தபடியால் மைலாப்பூர் ஜன்னல் கடையில் உருளைக் கிழங்கு பஜ்ஜி சாப்பிட்டுவிட்டுக் கடற்கரைக்குச் சென்று காற்றை முத்தமிட்டு அனுப்பியதாக செந்தூரம் ஜகதீஷ் எழுதியிருந்தார். இவற்றையும் இவை நிகர்த்த பிற குறிப்புகளையும் … Continue reading காதலற்றவன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed